Sunday, June 27, 2010

kaadal

நீரின்றி அமையாது இவ்வுலகம்
நீயின்றி அமையாது என்னுலகம்

மேகம் குளிர்ந்தால் மழை பிறக்கும் - உன்
இதயம் குளிர்ந்தால் என் காதல் பிறக்கும்

உச்சி மீது வான் விழுந்தாலும் அச்சமில்லை
நீ இல்லையென்று சொன்னாலும் காதல் விடுவதில்லை!!

மின்னலே - அவள் கண்களே!!!

மின்னலை கண்களால் கண்டதில்லை
கண்டால் கண்கள் இல்லை
மின்னலும் அவள் கண்களும் ஒன்று !!

அவள் பார்வையின் விலும்பில்
என் உயிர் பிறக்கும் - அவள் என்னை பார்த்தபின்பு
என் உயிர் துடிக்கும்!!

Saturday, June 19, 2010

காதலே..........என் காதலே....

உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி...

இரவினில் நன்றாக தூங்கியபடியே
பயணம் செய்யலாம் என்று
சொல்லி என்னை ரயிலில் அழைத்து
வந்து இப்படியெல்லாம் காதுக்குள்
பேசினால் எப்படிடா என்னால்
தனியாகத் தூங்கமுடியும்...?!!

எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?


பார்ப்பவர்கள் எல்லாம்
நீ ஏதோ என்னிடம்
ரகசியம் பேசுவதாக
நினைத்துக்கொள்கிறார்கள்..
திருட்டுப்பயல் உன்னைப்
பற்றி எனக்குத் தெரியதா..?
ச்ச்சீய்ய்... போடா....

இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?


இனி இரயில் பயணங்களில்
எல்லாம் என் அருகில்
அமராதே... மற்றவர்கள்
முன்பு நான் உன் குறும்பு
விரல்களால் நெளியாமல்
இருக்க படும் பாடு
உனக்கென்னடா தெரியும்...

கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...

Friday, January 1, 2010

புத்தாண்டு நல்வாழ்த்துகள்




அனைவர்க்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

வேர்வை துளியை மண்ணில் புதைத்து- நம்
வாழ்வை ஒளிமயமாக்கும்
விவசாய தொழிலாளிக்கு இந்த
கணினி தொழிலாளியின்
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்த நன்னாளில்
நாடு வளம் பெற
காடு செழிற் பெற
உன்னோடு சேர்ந்து நாங்களும் வளர
இறையை வணங்குகிறோம்.
---தனஞ்செயன்







Tuesday, December 22, 2009

kaadhal kirukalgal...

என்னோடு நீ இருந்தாலும் இல்லை என்றாலும்
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருபேன் உன் நினைவுகளை ......

ஆசைப்படுவதை மறந்து விடு .!
ஆனால், ஆசைபட்டதை மறந்து விடாதே..!!!

உயிரில்லை கல்லுக்கு சிலையாய் ஆன பிறகு
உயிரில்லை எனக்கு உன்னை பிரிந்த பிறகு ....

உன்னை தேடும் கண்களுக்கு சோர்வில்லை
தேடி தொலைந்ததால் கண்களுக்கு உணர்வில்லை...

காதலில் விழுந்ததடி நெஞ்சம் அன்று
ஆனால், உன்னை பிரிந்ததால்
உடலில் உயிருக்கு பஞ்சம் இன்று...

அன்று..
காதலினால் நீ தந்தது இதயம்.
ஆதலினால் என் வாழ்வில் உண்டானது உதயம்!
இன்று..
உன் பிரிவால் நான் ஆனேன் சதயம்....

மெய்யோடு முடியுமடி காதல் எனும் வார்த்தை.
என் மெயின்று முடிந்ததடி,
உன் பிரிவால் காதல் எனும் வாழ்க்கை....